search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிக மகசூல்"

    • சுரைக்காய் தமிழர் உணவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • சுரைக்காயை அனைத்து வகையான மண் உள்ள நிலங்களிலும் சாகுபடி செய்ய முடியும்.

    உடலுக்கு குளிர்ச்சியானது என்ற வகையில் சுரைக்காய் தமிழர் உணவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப காலங்களில் உணவுக்காக மட்டுமல்லாமல் தண்ணீர் சேமிக்கும் கலன் (சுரைக் குடுவை) ஆக சுரைக்காய் பயன்படுத்தப்பட்டது. தற்போது உணவுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பந்தல் சாகுபடியில் சுரைக்காய் உற்பத்தி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    சுரைக்காயை அனைத்து வகையான மண் உள்ள நிலங்களிலும் சாகுபடி செய்ய முடியும். ரசாயன உரங்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்வதை விட இயற்கை முறையில் அதிக மகசூல் ஈட்ட முடியும். பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து, பூக்கும் சமயத்தில் கொடியின் வேர்பகுதியில் ஊற்றினால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பொதுவாக சுரைக்காய் சாகுபடியில் நோய் தாக்குதல் குறைவாகவே காணப்படும். எனவே இயற்கை முறையில் சாகுபடி செய்வது எளிது.

    சுரைக்காய் கொடிகளை தரையில் படர விட்டும், குச்சிகளை ஊன்றி அதன் மீது படர விட்டும், பந்தல் அமைத்தும் சாகுபடி செய்யலாம். கிராமங்களில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் கூரை மீது சுரைக்காய் கொடியை படர விடுவதும் உண்டு. ஆனால் பந்தல் சாகுபடி தவிர்த்து மற்ற முறைகளில் பயிர் செய்யும் போது மழை, ஈரப்பதம் போன்றவற்றால் சுரைக்காயின் மகசூல் பாதிப்புக்கு வாய்ப்பு உள்ளது.

    ஆனால் பந்தல் சாகுபடியில் அதிக மகசூல் கிடைப்பதுடன் செடிகளின் ஆயுள் காலமும் அதிகரிக்கும். ஆரம்ப கட்டங்களில் பந்தல் அமைக்க அதிக அளவில் செலவு பிடிக்கும் என்பதால், அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் பந்தல் சாகுபடியில் ஈடுபடுவதில்லை. ஆனால் ஒரு முறை பந்தல் அமைத்தால் பல ஆண்டுகள் அதனை பயன்படுத்த முடியும்.

    அதுமட்டுமல்லாமல் அரசு தோட்டக்கலைத்துறை மூலம் பந்தல் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. மேலும் சுரைக்காய் மட்டுமல்லாமல் பாகற்காய், புடலங்காய் உள்ளிட்ட பந்தல் காய்கறிகளை மாற்றி மாற்றி சாகுபடி செய்து ஆண்டு முழுவதும் வருவாய் ஈட்ட முடியும். வீரிய ஒட்டு ரகங்கள் நாட்டு விதைகள் மூலம் சாகுபடி செய்யும் போது ஆண்டுக்கு ஒரு பட்டத்தில் மட்டுமே சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி ஆடி மாதத்தில் விதைத்தால் தை மாதம் தொடங்கி சித்திரை மாதம் வரை மகசூல் கிடைக்கும். ஆனால் தற்போது பல வீரிய ஒட்டு ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆண்டு முழுவதும் சுரைக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.

    சுரைக்காயை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு வெளியேற சிறந்த மருந்தாக செயல்படும். பெண்களுக்கு உண்டாகும் ரத்த சோகையைப் போக்கும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். குடல் புண்ணை ஆற்றும். மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்தாகும். சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.

    • இயற்கை விவசாயத்தில் முக்கிய வளர்ச்சி ஊக்கியாக பஞ்சகாவ்யா விளங்குகிறது.
    • பயிரின் வேரானது நீளமாகவும், ஆழமாகவும் வளர்கிறது. பயிரின் தண்டுப் பகுதி நீளமாகவும், பரு மனாகவும், உறுதியாகவும் வளரும். பூச்சி நோய் தாக்குதல் இன்றி காணப்படும்.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரி விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் ஜெய மாலா தெரிவித்துள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:-

    மண் வளத்தையும், இயற்கையையும் பாதுகாப்பதற்கு இயற்கை வேளாண்மை சிறந்த ஒன்றாகும்.

    அதிக அளவு ரசாயன பொருட்களை விவசா யத்திற்கு பயன்படுத்துவதால் மண்ணின் வளம் பாதிக்கிறது.

    இயற்கை வேளாண்மை விவசாயத்தில் பயன்படுத்து வதால் மண்வளம் மேம்படுகிறது. எனவே தற்போது விவசாயிகள் இயற்கை விவசாயத்தை நோக்கி செல்கின்றனர்.

    இயற்கை விவசாயத்தில் முக்கிய வளர்ச்சி ஊக்கியாக பஞ்சகாவ்யா விளங்குகிறது.

    பஞ்சகாவ்யா 300 மிலி கரைசலை 10 லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து இலை வழி தெளி உரமாக, காலை அல்லது மாலை நேரங்களில் அனைத்துப் பயிர்களுக்கும் தெளிக்க லாம்.

    நாற்றுகளை நடவு செய்வதற்கு முன்பு 3 சதம் பஞ்சகாவ்யா கரைசலில் 20 நிமிடங்கள் நனைத்து நடவு செய்ய வேண்டும்.

    மஞ்சள், பூண்டு மற்றும் கருப்பு கரணைகளை நடவு செய்வதற்கு முன்பு 3 சதவீதம் பஞ்சகாவ்யா கரைசலில் 30 நிமிடங்களில் நனைத்து நடவு செய்ய வேண்டும்.

    கைத் தெளிப்பானில் தெளிக்கும்போது வடிகட்டி பயன்படுத்த வேண்டும். விசைத் தெளிப்பானில் அடைப்பானையும், குழாயின் நுனிப் பகுதியையும் பெரிதாக செய்து கொண்டால் தெளிப்பு அடைப்பின்றி ஒரே சீராக வரும். பயிர்களுக்கு பஞ்சகாவ்யா தெளிப்பதால் மகசூல் கூடுகிறது. மண்ணின் வளம், பயிர்களின் வளம் காக்கப்படுகிறது.

    பயிரின் வேரானது நீளமாகவும், ஆழமாகவும் வளர்கிறது. பயிரின் தண்டுப் பகுதி நீளமாகவும், பரு மனாகவும், உறுதியாகவும் வளரும். பூச்சி நோய் தாக்குதல் இன்றி காணப்படும்.

    பூக்கள் வாடாமல் ஒரு நாள் முழுவதும் அப்படியே இருக்கும் மற்றும் பழங்களின் தரம் கூடுகிறது. விளைச்சலும் 10-15 நாட்கள் முன்பே அறுவடைக்கு வருகின்றன.

    தரமான நஞ்சற்ற பொருள் கிடைக்கிறது. சுற்றுச்சூழல் பாது காக்கப்படுகிறது.

    எனவே உடலுக்கு தீங்கற்ற உணவு உற்பத்தியை மேற்கொள்ளவும் சுற்றுச்சூழல் காக்கவும், குறைந்த செலவில் நம் வீட்டில் வளர்க்கும் பசு மாட்டின் ஐந்து பொருட்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் கார்த்திகை மாத இறுதி பட்ட பருவத்தில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ள தயாராகி வருகிறார்கள்.
    • விவசாயிகளின் வாழ்வாதாரமாக பவானிசாகர் அணை இருந்து வருகிறது.

    வெள்ளகோவில்:

    முத்தூர், நத்தக்காடையூர் பகுதி விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற முன்வர வேண்டும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

    தமிழக விதை சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை இயக்குனர் கோ.வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், பூமாண்டன் வலசு, ராசாத்தாவலசு, வள்ளியரச்சல் மற்றும் நத்தக்காடையூர், முள்ளிப்புரம், பழையகோட்டை, குட்டப்பாளையம், மருதுறை ஆகிய வருவாய் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக பவானிசாகர் அணை இருந்து வருகிறது.

    விவசாயிகள் கார்த்திகை மாத இறுதி பட்ட பருவத்தில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ள தயாராகி வருகிறார்கள். நிலக்கடலை சாகுபடி செய்யும் காலங்களில் விளைச்சல் அதிகரித்து அதிக வருமானம் பெறுவதற்கு நிலக்கடலை விதை பருப்புகள் பங்கு முக்கியமானது. எனவே விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி தொடங்கும் காலத்தில் நல்ல தரமான நிலக்கடலை விதை கிடைத்திடும் வகையில் விதை சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    நிலக்கடலை சாகுபடியில் நல்ல ரக நிலக்கடலை விதை பருப்புகளை விதை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே ரசீது பெற்று வாங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    நிலக்கடலை விதை பருப்புகள் தரமற்றதாகவும், முளைப்புத் திறன் குறைபாடு கொண்டதாகவும் இருக்கும் பட்சத்தில் உடனடியாக ஈரோடு மாவட்ட விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் மற்றும் புகார் மனு அனுப்பி தீர்வு கண்டு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அங்கக வேளாண்மையில் இயற்கை உரமான உயிர் உரங்கள் ஓர் முக்கிய பங்கு வகுக்கிறது
    • சாம்பல் சத்துமண்ணில் அதிக அளவு இருந்தாலும் 2 சதவீதம் மட்டுமே பயிர்களால் எடுத்து கொள்ளும் வகையில் உள்ளது.

    ஈரோடு, செப். 20-

    கொடுமுடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் யசோதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:

    அங்கக வேளாண்மையில் இயற்கை உரமான உயிர் உரங்கள் ஓர் முக்கிய பங்கு வகுக்கிறது. காற்றில் இருக்கும் தழைச்சத்தை நிலை நிறுத்தி, மண்ணில் கரையாத நிலையில் உள்ள மணிச்சத்து, சாம்பல் சத்தை கரைத்து, நுண்ணூட்ட சத்துக்களை உறிஞ்சி கொடுக்கும் திறன் மிக்க பாக்டீரியாக்கள் மூலம் உயிர் உரம் தயாரிக்கப் படுகிறது.

    தழைச்சத்திற்கு அசோஸ் பைரில்லம், ரைசோபியம் போன்ற உயிர் உரங்களையும் மணிச்சத்திற்கு பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களையும் பயன் படுத்தலாம். மேலும் பொட்டாஷ் மண்ணில் உள்ள சாம்பல் சத்தை கரைத்து பயிருக்கு அளிக்கக் கூடியது.

    சாம்பல் சத்துமண்ணில் அதிக அளவு இருந்தாலும் 2 சதவீதம் மட்டுமே பயிர்களால் எடுத்து கொள்ளும் வகையில் உள்ளது. அத்தகைய மண்ணில் கரையாத நிலை யில் உள்ள சாம்பல் சத்தை கரைத்து பயிர்கள் எடுத்து கொள்ளும் வகையில் அளிக்க வல்லது இந்த பாக்டீரியா மேலும் வறண்ட சூழ்நிலையில் பயிர்கள் வெப்பத்தை தாங்கி வளர வழி வகுக்கிறது.

    சரியான ஒளிச் சேர்க்கைக்கும் உதவுகிறது. மணிகளின் எடையை அதிகரித்து மகசூலை 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கிறது.

    திரவ உயிர் உரங்களைக் கொண்டு நெல் விதை நேர்த்தி செய்ய ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் 50 மில்லி லிட்டர் கலந்து பின் தெளிக்கலாம்.

    ஒரு ஏக்கர் நாற்றுகளுக்கு 100 மில்லி லிட்டர, திரவ உயிர் உரத்தை தேவையான அளவு தண்ணீரில் கலந்து நாற்றின் வோப் பகுதி நன்கு நனையுமாறு 30 நிமிடங்கள் வைத்து பின் நடவு செய்ய வேண்டும்.

    அடி உரமாக ஒரு ஏக்கருக்கு 200 மில்லி லிட்டர் திரவ உயிர் உரத்தை தொழு உரத்துடன் நன்கு கலந்து நடவுக்கு முன் வயலில் இட வேண்டும்.

    ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி லிட்டர் திரவ உயிர் உரம் என்ற அளவில் கலந்து விதைப்பு செய்யப்பட்ட நாளில் இருந்து 15, 30 மற்றும் 45-வது நாட்களில் பயிர்களில் படும்படி தெளிக்கலாம். உழவர்கள் திரவ உயிர் உரங்களை பயன் படுத்துவதன் மூலம் அதிக மகசூல் எடுக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் சிறு தானிய பயிரில் வரகு சாகுபடி பரப்பு 300 ஏக்கராக அதிகரித்து உள்ளது.
    • பயறு வகை பயிர்களில் ஏக்கருக்கு 600 கிலோ வரை மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
    • இயற்கை முறை சாகுபடி என்பதால் தரமான விளை பொருளுக்கான அதிகப்பட்ச விலை கிடைக்கும்.

    ஈரோடு:

    அந்தியூர் தாலுகா பர்கூர் மலை பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் குறித்து வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி ஆய்வு செய்தார்.

    பின்னர் இது குறித்து சின்னசாமி கூறியதாவது:-

    இந்த ஆண்டில் அந்தியூர் உள்ளிட்ட மலைப்பகுதியில் கோடை மழை போதிய அளவு பெய்துள்ளது.

    இதனால் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை விரிவாக்க அலுவலர்கள் இப்பகுதி விவசாயிகளிடையே சிறு தானியம் குறித்தான உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    எப்போதும் இல்லாத வகையில் தற்போது வரகு பயிர் 300 ஏக்கரிலும், பயறு வகைகளான உளுந்து, தட்டை பயறு, பாசிப்பயறு 1,800 ஏக்கரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தேவர்மலை, மடம், கடையீரட்டி, வெள்ளி மலை, பெஜலிட்டி, ஈரட்டி, எலச்சிபாளையம் போன்ற கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் நல்ல நிலையில் உள்ளன.

    விதை கிராம திட்டத்தில் 50 சதவீத மானியத்தில் 1,000 கிலோ வம்பன்– 8 என்ற உயர் விளைச்சல் உளுந்து ரகம், 500 கிலோ பாசிப்பயறு வம்பன்– 6 ரகம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

    பயறு வகை பயிர்களுக்கென்றே உண்டான சிறப்பம்சமான வேர் முடிச்சுகள் உருவாவது இங்கு சாகுபடி செய்யப்பட்ட பயறு வகை பயிரில் அதிக எண்ணிக்கையில் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதனால் பயிரின் வளர்ச்சி நல்ல நிலையில் இருப்பதும், அதிகமான பூக்கள் எடுப்பதும், அதிக மகசூல் கிடைப்பதும் எளிதாகி உள்ளது.

    பயறு வகை பயிர்களில் ஏக்கருக்கு 600 கிலோ வரை மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கு முற்றிலும் இயற்கை முறை சாகுபடி என்பதால் தரமான விளை பொருளுக்கான அதிகப்பட்ச விலை கிடைக்கும்.

    இப்பகுதி விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு தாமரைக்கரையில் துணை வேளாண் விரிவாக்க மையம் கட்ட இடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×